Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தை சரிவு : பா.ஜ.க கவலை!

பங்குச் சந்தை சரிவு : பா.ஜ.க கவலை!
, திங்கள், 21 ஜனவரி 2008 (20:22 IST)
பங்குச் சந்தையில் சரிவு கவலையை உண்டாக்குவதாக பாரதிய ஜனதா கட்சி கூறியுள்ளது.

இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1408.35 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 496.50 புள்ளிகளும் குறைந்தன. இந்த பாதிப்பில் இருந்து சிறு முதலீட்டாளர்களை காப்பாற்ற மத்திய அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் செய்துள்ள முதலீடு பற்றி நாங்கள் கவலை அடைந்துள்ளோம். அவர்களை காப்பாற்றுதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசும், பங்குச் சந்தையை கட்டுப்படுத்தும் செபியும் எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க.வின் செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil