Publish Date: Tue, 25 Feb 2014 (16:23 IST)
Updated Date: Tue, 25 Feb 2014 (16:23 IST)
பங்குச்சந்தை இன்று ஏற்றத்துடன் நிறைவடைந்தது. மும்பை குறியீட்டு எண் சென்செக்ஸ் 41.03 புள்ளிகள் உயர்ந்து 20852 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தையான நிப்டி 13.95 புள்ளிகள் உயர்ந்து 6200 புள்ளிகளாகவும் நிறைவடைந்தன.
இன்று, விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, பெல், சிப்ளா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றத்துடனும், கோல் இந்தியா, செசா கோவா, டாடா ஸ்டீல், டாடா பவர் மற்றும் கெய்ல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடனும் நிறைவடைந்துள்ளன.