Publish Date: Wed, 04 Feb 2009 (16:23 IST)
Updated Date: Wed, 04 Feb 2009 (16:23 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் படிப்படியாக குறைந்தாலும், இறுதியில் அதிக பாதிப்பில்லை.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 52.55 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,201.85 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 19.15 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 2,803.05 ஆக அதிகரித்தது.
அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 13.07, சுமால் கேப் 0.94 புள்ளிகள் குறைந்தன.
ஆனால் பி.எஸ்.இ 500- 11.32 புள்ளி அதிகரித்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1148 பங்குகளின் விலை அதிகரித்தது. 1278 பங்குகளின் விலை குறைந்தது. 102 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.