Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை உயர்வு

Advertiesment
பங்குச் சந்தை உயர்வு
மும்பை , செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (10:46 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாது, இன்று ஆசிய நாடுகளில் மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா தவிர மற்ற பங்குச் சந்தைகளிலும் சாதகமான நிலை இருந்தது.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 127.51, நிஃப்டி 36.60 புள்ளிகள் அதிகரித்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளின் பாதிப்பு காரணமாக, இன்று இந்திய பங்குச் சந்தையில் காலையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தாலும், இதே நிலை நீடிக்குமா என்பது கேள்விக்குறியே. நேற்று பங்குகளை விற்பனை செய்த நிறுவனங்கள், இன்று வாங்கும். இதனால் அடிக்கடி மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

இன்று சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 11.12, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 16.67, ஜப்பானின் நிக்கி 65.05, ஹாங்காங்கின் ஹாங்செங் 79.49, சீனாவின் சாங்காய் காம்போசிட் 27.64 புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நாஸ்டாக் மட்டும் அதிகரித்தது. டோவ் ஜோன்ஸ் 64.03, எஸ் அண்ட் பி 500- 0.44 புள்ளிகள் குறைந்தன. நாஸ்டாக் 18.01 புள்ளி அதிகரித்தது.

ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தை நேற்று சரிவை எதிர்கொண்டது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-71.86 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 27.10 (NSE-nifty) புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 2,763.75 ஆக உயர்ந்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 93.89 (BSE-sensex) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,160.59 ஆக உயர்ந்தது.

மிட் கேப் 4.83, பி.எஸ்.இ. 500- 26.24, சுமால் கேப் 9.43 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.35 மணியளவில் 846 பங்குகளின் விலை அதிகரித்தும், 610 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 69 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நிகரமாக ரூ.125.68 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் நிகரமாக ரூ.161.38 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil