Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை உயர்வு

Advertiesment
சீனா ஹாங்காங் NSEnifty BSEsensex
மும்பை , புதன், 28 ஜனவரி 2009 (10:34 IST)
பங்குச் சந்தைகளில் இன்றும் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மற்ற நாடுகளிலும் பங்குச் சந்தை அதிகரித்து உள்ளது. இதனால் இந்திய பங்குச் சந்தையிலும் உயர்வு காணப்படுகிறது. ஆனால் இதே நிலை நாள்முழுவதும் நீடிக்கும் என்று தெரியவில்லை. ஏனெனில் முன்பேர சந்தையில் ஜனவரி மாத ஒப்பந்தம் முடிவடைகின்றது. இதனால் இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் அதிக மாற்றத்துடன் இருக்க வாய்ப்பு உண்டு என்று தெரிகிறது.

காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 78.29, நிஃப்டி 30.55 புள்ளிகள் உயர்ந்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில், இன்று காலை ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் பங்குச் சந்தையில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

இன்று சீனர்களின் புது வருட பிறப்பை ஒட்டி சீனா, ஹாங்காங், தைவான் பங்குச் சந்தைகள் விடுமுறை.

சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 56.71, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 54.84, ஜப்பானின் நிக்கி 79.43 புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்றும் குறியீட்டு எண்கள் உயர்ந்தன. டோவ் ஜோன்ஸ் 58.70, நாஸ்டாக் 15.44, எஸ் அண்ட் பி 500-9.14 புள்ளிகள் அதிகரித்தன.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று நெதர்லாந்து தவிர, மற்ற பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை நிலவியது. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-14.60 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.25 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 30.35 (NSE-nifty) புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 2,801.70 ஆக அதிகரித்தது.

இதே போல் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 99.58 (BSE-sensex) புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,103.56 ஆக அதிகரித்தது.

மிட் கேப் 21.02, பி.எஸ்.இ. 500- 33.12, சுமால் கேப் 21.97 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.22 மணியளவில் 826 பங்குகளின் விலை அதிகரித்தும், 509 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 45 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று நிகரமாக ரூ.228.56 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அதே நேரத்தில் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் நிகரமாக ரூ.139.64 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil