Publish Date: Wed, 21 Jan 2009 (12:06 IST)
Updated Date: Wed, 21 Jan 2009 (12:06 IST)
அந்நியச் செலவாணி சந்தையில், காலையில் வர்த்தகம் தொடங்கிய போது இருந்த நிலை அடுத்த அரை மணி நேரத்திலேயே மாறியது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.29 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 9 பைசா குறைவு.
அதற்கு பிறகு நிலைமை மாறியது காலை 10.30 மணியளவில், டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்க துவங்கியது.
1 டாலர் ரூ.49.16-ரூ.49.18 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்று இறுதி நிலவரத்தை விட 4 பைசா உயர்வு.
நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.20.
இன்று அந்நியச் செலவாணி சந்தையில் டாலர் ரூ.49.16 முதல் ரூ.49.40 என்ற அளவில் விற்னையாகும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர். பங்குச் சந்தையில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் அதிக அளவு பங்குகளை விற்பனை செய்தால், டாலரின் தேவை அதிகரிக்கும். பங்குச் சந்தை நிலவரத்தை பொறுத்தே, அந்நியச் செலவாணி சந்தையிலும் டாலரின் விலையில் மாற்றம் இருக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.