Publish Date: Wed, 21 Jan 2009 (11:32 IST)
Updated Date: Wed, 21 Jan 2009 (11:31 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா குறைந்தது.
ஆசிய நாட்டு சந்தைகளில் பாதகமான நிலை நிலவுவதால், இந்திய பங்குச் சந்தையில் இன்றும் குறியீட்டு எண்கள் குறைந்தன. அத்துடன் மற்ற நாட்டு அந்நியச் செலவாணி சந்தையில், டாலர் மதிப்பு அதிகரித்தது. இதை போன்றே இந்தியாவிலும் ரூபாயக்கு நிகரான டாலரின் மதிப்பு அதிகரித்தது.
இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.29 என்ற அளவில் இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 9 பைசா குறைவு.