Newsworld Finance Market 0901 16 1090116007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை ஏற்றம்

Advertiesment
நிஃப்டி சென்செக்ஸ்  பிஎஸ்இ BSE தேசிய பங்குச் சந்தை  என்எஸ்இNSE
மும்பை: , வெள்ளி, 16 ஜனவரி 2009 (10:46 IST)
பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போதே, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிகரித்தன.

காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 98.51, நிஃப்டி 30.30 புள்ளிகள் அதிகரித்தன.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று காலையில் சாதகமான நிலை நிலவியது.
மலேசியா, பிலிப்பைன்ஸ் மட்டும் சிறிய அளவில் குறைந்து இருந்தது.

ஹாங்காங்கினஹாங்செங் 18.79, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 9.16, ஜப்பானின் நிக்கி 121.24, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 5.26, சீனாவின் சாங்காய் காம்போசிட் 42.88 புள்ளிகள் அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 12.35, எஸ் அண்ட் பி 1.12, நாஸ்டாக் 22.20 புள்ளிகள் அதிகரித்தன.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று சுவிட்சர்லாந்து தவிர மற்ற பங்குச் சந்தைகளின் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-59.53 புள்ளிகள் குறைந்தது.

ஆசிய நாட்டு பங்குச் சநதைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே குறியீட்டு எண்கள் அதிகரித்தன. இந்தியாவின் மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் தகவல் தொழில் நுட்பம், ரியல் எஸ்டேட் பிரிவு தவிர மற்ற பிரிவு பங்கு குறியீட்டு எண்கள் அதிகரித்தன. நேற்று குறைந்தாலும் இன்று, சென்செக்ஸ், நிஃப்டி மட்டுமல்லாது மற்ற பிரிவில் உள்ள பங்குகளின் விலையும் அதிகரித்தது. அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை வாங்கும் போக்கு தெரிகிறது. இதனால் டாலர் வரத்து அந்நிய செலவாணி சந்தையில் இருக்கும்.

அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 பைசா அதிகரித்தது.

இரண்டு பங்குச் சந்தைகளிலும் உயர்வு காணப்பட்டாலும், நண்பகலுக்கு பிறகு மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

காலை 10.30 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் ( என்.எஸ்.இ-NSE ) நிஃப்டி 47.95 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 2784.65 ஆக உயர்ந்தது.

இதே போல் சென்செக்ஸ் 166.95 புள்ளிகள் உயர்ந்து, குறியீட்டு எண் 9,213.69 ஆக அதிகரித்தது.

மிட் கேப் 33.48, பி.எஸ்.இ. 500- 53.94, சுமால் கேப் 30.24 புள்ளிகள் உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் ( பி.எஸ்.இ-BSE ) காலை 10.28 மணியளவில் 889, பங்குகளின் விலை அதிகரித்தும், 484, பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 44 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.484.33 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.175.12 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil