Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி ஸ்டெர்ய்ட் டைம்ஸ் சியோல் காம்போசிட் nse bse
மும்பை , செவ்வாய், 13 ஜனவரி 2009 (11:34 IST)
பங்குச் சந்தைகளில் வர்த்தகம் தொடங்கும் போது, எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன. ஆனால் 10.15 மணியளவில் அதிகரிக்க துவங்கியது.

காலை 10.05 மணியளவில் சென்செக்ஸ் 25.91, நிஃப்டி 23.95 புள்ளிகள் குறைந்தன.

கடந்த இரண்டு நாட்களாக பங்குச் சந்தை சரிவை சந்தித்து. இன்று நாள்முழுவதும் அடிக்கடி மாற்றங்களைச் சந்திக்கும். மதியத்திற்கு பிறகு நிலையான தன்மைக்கு வர வாய்ப்பு உண்டு.

ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் இன்று காலையில், சில பங்குச் சந்தைகளில் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. சிலவற்றில் குறைந்தன.

ஹாங்காங்கினஹாங்செங் 9.91, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 25.13, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 7.30 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

ஜப்பானின் நிக்கி 375.59, சீனாவின் சாங்காய் காம்போசிட் 25.78 புள்ளிகள் குறைந்து இருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 125.21, எஸ் அண்ட் பி 500-20.09, நாஸ்டாக் 32.80 புள்ளிகள் குறைந்தது.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று எல்லா பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-22.35 புள்ளிகள் குறைந்தது.

காலை 11 மணியளவில் நிஃப்டி 27.15 புள்ளி அதிகரித்து, குறியீட்டு எண் 2800.25 ஆக அதிகரித்தது.

இதே போல் சென்செக்ஸ் 121.38 புள்ளிகள் அதிகரித்து, குறியீட்டு எண் 9,231.43 ஆக அதிகரித்தது.

மிட் கேப் 30.76, பி.எஸ்.இ. 500- 36.77, சுமால் கேப் 27.53 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 11 மணியளவில் 966 பங்குகளின் விலை அதிகரித்தும், 709 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 59 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.563.57 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஆனால் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.217.83 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil