Newsworld Finance Market 0812 29 1081229009_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை சரிவு

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி
, திங்கள், 29 டிசம்பர் 2008 (10:36 IST)
மும்பை: பங்குச் சந்தைகள் சரிவுடன் துவங்கின.

காலை 1010 மணியளவில் சென்செக்ஸ் 85.17, நிஃப்டி 18.05 புள்ளிகள் குறைந்தது.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இன்று சிலவற்றில் குறியீட்டு எண்கள் குறைந்தும், சிலவற்றில் அதிகரித்தும் இருந்தது.

ஹாங்காங்கினஹாங்செங் 24.03, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 12.69 புள்ளிகள் அதிகரித்தது.

சீனாவின் சாங்காய் காம்போசிட் 20.55, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 23.93, ஜப்பானின் நிக்கி 72.90, புள்ளிகள் குறைந்து இருந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் வெள்ளிக் கிழமை டோவ் ஜோன் 47.07, எஸ் அண்ட் பி 500-7.38, நாஸ்டாக் 5.34 புள்ளிகள் அதிகரித்தது.

ஐரோப்பிய நாடுகளில் வெள்ளிக் கிழமை ஆஸ்திரியா தவிர மற்ற நாட்டு பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-39.39 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.25 மணியளவில் நிஃப்டி 30 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 2,827.25 ஆக குறைந்தது.

இதே போல் சென்செக்ஸ் 105.45 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,223.47 ஆக குறைந்தது.

மிட் கேப் 28.01, பி.எஸ்.இ. 500- 34.32, சுமால் கேப் 25.80 புள்ளிகள் குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.19 மணியளவில் 378 பங்குகளின் விலை அதிகரித்தும், 864 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 38 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் வெள்ளிக் கிழமை ரூ.344.91, கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

அதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.6.95 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil