Newsworld Finance Market 0812 23 1081223006_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை சரிவு

Advertiesment
சென்செக்ஸ் நிஃப்டி
, செவ்வாய், 23 டிசம்பர் 2008 (10:37 IST)
மும்பை: பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் சரிந்தன.

காலை 10.10 மணியளவில் சென்செக்ஸ் 139.02, நிஃப்டி 35.55 புள்ளிகள் குறைந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று டோவ் ஜோன் 59.42, ஆனால் எஸ் அண்ட் பி 500-16.25, நாஸ்டாக் 31.97 புள்ளிகள் குறைந்தது.

ஐரோப்பிய நாடுகளில் நேற்று எல்லா நாட்டு பங்குச் சந்தைகளில் பாதகமான நிலை இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-81.50 புள்ளிகள் குறைந்தன.

காலை 10.26 மணியளவில் நிஃப்டி 47.90 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 2,991.40 ஆக குறைந்தது.

இதே போல் சென்செக்ஸ் 180.94 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 9,747.41 ஆக குறைந்தது..

மிட் கேப் 39.30, பி.எஸ்.இ. 500- 59.27, சுமால் கேப் 38.21 புள்ளிகள் குறைந்தது.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளில் இன்று குறியீட்டு எண்கள் குறைந்து இருந்தது. இன்று ஜப்பான் பங்குச் சந்தைக்கு விடுமுறை.

ஹாங்காங்கினஹாங்செங் 411.71, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 7.13, சீனாவின் சாங்காய் காம்போசிட் 58.47, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 32.46 புள்ளிகள் குறைந்து இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.27 மணியளவில் 415 பங்குகளின் விலை அதிகரித்தும், 919 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 24 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ.191.49 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.207.55 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil