Newsworld Finance Market 0812 16 1081216074_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 145 -நிஃப்டி 61 புள்ளி உயர்வு

Advertiesment
நிஃப்டி சென்செக்ஸ்
, செவ்வாய், 16 டிசம்பர் 2008 (17:05 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதிருந்தே, ஏற்ற இறக்கத்துடன் இருந்த குறியீட்டு எண்கள், மதியம் இரண்டரை மணிக்கு மேல் அதிகரிக்க துவங்கின.

இன்று தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 3 ஆயிரம் புள்ளிகளை தாண்டியது.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 144.59 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,976.98 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 60.55 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3,041.75 ஆக அதிகரித்தது.

அதே போல் மிட் கேப் 79.14, பி.எஸ்.இ 500- 68.56, சுமால் கேப் 117.56 புள்ளிகள் அதிகரித்தன.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1866 பங்குகளின் விலை அதிகரித்தது. 648 பங்குகளின் விலை குறைந்தது. 67 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

Share this Story:

Follow Webdunia tamil