Publish Date: Fri, 12 Dec 2008 (16:57 IST)
Updated Date: Fri, 12 Dec 2008 (16:55 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே, குறியீட்டு எண்கள் சரிந்தன. இன்று நாள் முழுவதும் சிறிய வேறுபாடுடன் இருந்த பங்குச் சந்தை, மதியம் 2.30 மணிக்கு பிறகு அதிகரிக்க ஆரம்பித்தது. இறுதியில் அதிக வேறுபாடு இல்லாமல் அதிகரித்தது.
வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 44.81 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 9,690.07 ஆக உயர்ந்தது.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 1.20 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 2,921.35 ஆக அதிகரித்தது.
ஆனால் மிட் கேப் 47.40, பி.எஸ்.இ 500- 22.21, சுமால் கேப் 87.37 புள்ளிகள் அதிகரித்தன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1547 பங்குகளின் விலை அதிகரித்தது. 851 பங்குகளின் விலை குறைந்தது. 81 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.