Newsworld Finance Market 0812 08 1081208041_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூபாய் மதிப்பு 35 பைசா உயர்வு

Advertiesment
ரிசர்வ் வங்கி டாலர் யூரோ யென் பவுன்ட் ஸ்டெர்லிங்
, திங்கள், 8 டிசம்பர் 2008 (13:58 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.35 பைசா அதிகரித்தது.

இன்று வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.49.22 ஆக இருந்தது இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 35 பைசா குறைவு.

வர்த்தகம் நடக்கும் போது. 1 டாலரின் விலை ரூ.49.20 முதல் ரூ.49.27 என்ற அளவில் இருந்தது.

கடந்த இரண்டு நாட்களில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 60 பைசா அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா, ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளில் சாதகமான நிலை காணப்படுகிறது. இதனால் இந்திய பங்குச் சந்தையிலும் ஏற்றம் இருக்கும். அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்பனை செய்வது குறையும். இதனால் டாலரின் தேவை அதிகரிக்காது என்பதால் வங்கிகளும், ஏற்றுமதியாளர்களும் டாலரை விற்பனை செய்கின்றனர். டாலர் மதிப்பு குறைவதற்கு, இதுவே காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலர் மதிப்பு ரூ.49.22 பைச
1 யூரோ மதிப்பு ரூ.63.14
100 யென் மதிப்பு ரூ.52.99
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.73.03.

Share this Story:

Follow Webdunia tamil