Newsworld Finance Market 0812 02 1081202007_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை சரிவு

Advertiesment
நிஃப்டி சென்செக்ஸ்
, செவ்வாய், 2 டிசம்பர் 2008 (11:02 IST)
பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது குறியீட்டு எண்கள் சரிந்தன.

இன்று காலை பங்குச் சந்தைகளிலவர்த்தகம் தொடங்கும் போது நிஃப்டி 76.50, சென்செக்ஸ் 229.19 புள்ளிகள் குறைந்தது.


அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடியில் இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் அமெரிக்க பங்குச் சந்தை நேற்று கடும் சரிவை சந்தித்தது. டோவ் ஜோன்ஸ் 679.95, எஸ் அண்ட் பி 500-80.03, நாஸ்டாக் 137.50 புள்ளிகள் குறைந்தன.

ஐரோப்பிய நாடுகளிலும் நேற்று பாதகமான நிலையே இருந்தது. பிரிட்டனின் எப்.டி.எஸ் இ 100-222.52 புள்ளிகள் குறைந்தது.

காலை 10.45 மணியளவில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 75.20 (2.80%) புள்ளிகள் குறைந்து, குறியீட்டு எண் 2,607.70 ஆக குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 260.67 (2.95%) புள்ளிகள் உயர்ந்து, குறியீட்டு எண் 8,579.20 ஆக குறைந்தது.

இதே போல் மிட் கேப் 64.79, சுமால் கேப் 48.77, பி.எஸ்.இ. 500- 88.45 புள்ளிகள் குறைந்தன.

ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண் குறைந்தது.

ஜப்பானின் நிக்கி 359.47, சிங்கப்பூரின் ஸ்டெர்ய்ட் டைம்ஸ் 35.13, ஹாங்காங்கினஹாங்செங் 696.88, தென்கொரியாவின் சியோல் காம்போசிட் 24.62, சீனாவின் சாங்காய் காம்போசிட் 6.72 புள்ளிகள் குறைந்தன.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.43 மணியளவில் 304 பங்குகளின் விலை அதிகரித்தும், 978 பங்குகளின் விலை குறைந்து இருந்தது. 41 பங்குகளின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் நேற்று ரூ. 28.64 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இதே போல் உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்களும் ரூ.49.19 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil