Newsworld Finance Market 0811 10 1081110071_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிஃப்டி 175 -சென்செக்ஸ் 572 புள்ளி உயர்வு!

Advertiesment
நிஃப்டி சென்செக்ஸ் சிஎன்எக்ஸ் ஐடி
, திங்கள், 10 நவம்பர் 2008 (17:46 IST)
மும்பை: மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, அதிகர்த்த குறியீட்டு எண்கள், நண்பகலுக்கு பிறகு முன்னேற துவங்கின. ஆனால் கடைசி வரை சீராக உயர்ந்தன.

வர்த்தகம் முடிவடைந்த போது சென்செக்ஸ் 571.87 (5.74%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 10,536.16 ஆக உயர்ந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 175.25 (5.89%) புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 3148.25 ஆக உயர்ந்தது.

மிட் கேப் 119.71 (3.57%), சுமால் கேப் 87.93 (2.25%), பி.எஸ்.இ 500- 186.10 (5.04%) புள்ளிகள் அதிகரித்தது.

இன்றைய வர்த்தகத்தில் உலோக உற்பத்தி 10.92% , மின் உற்பத்தி 7.84%, நுகர்வோர் பொருட்கள் 6.33%, பெட்ரோலிய நிறுவனங்கள் 6.11%, தொழில் நுட்பம் 5.98%, பொதுத்துறை நிறுவனங்கள் 5.62%, தகவல் தொழில் நுட்பம் 5.44%, ரியல் எஸ்டேட் 5.04%, வங்கி 4.53%, வாகன உற்பத்தி 2.46%, அதிகரித்தது.

மும்பபங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1694 பங்குகளின் விலை அதிகரித்தது. 855 பங்குகளின் விலை குறைந்தது. 73 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிரிவில் உள்ள 50 பங்குகளில் 45 பங்குகளின் விலை அதிகரித்தது. 5 பங்குகளின் விலை குறைந்தது.

ஜீனியர் நிஃப்டி பிரிவில் உள்ள 49 பங்குகளில் 45 பங்குகளின் விலை அதிகரித்தது. 4 பங்குகளின் விலை குறைந்தது.

சி.என்.எக்ஸ் ஐ.டி பிரிவில் உள்ள 19 பங்குகளில் 18 பங்குகளின் விலை அதிகரித்தது. 1 பங்குகளின் விலை குறைந்தது.

வங்கி நிஃப்டி பிரிவில் உள்ள 12 பங்குகளில், 12 பங்குகளின் விலையும் அதிகரித்தது.

மிட்கேப் பிரிவில் உள்ள 49 பங்குகளில் 47 பங்குகளின் விலை உயர்ந்தது. 2 பங்குகளின் விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil