Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் மதிப்பு 54 பைசா உயர்வு!

Advertiesment
டாலர் மதிப்பு 54 பைசா உயர்வு!
, வியாழன், 23 அக்டோபர் 2008 (14:17 IST)
மும்பை: வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலவாணி சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது, 1 டாலரின் மதிப்பு ரூ. 49.68 என்ற அளவில் தொடங்கியது.

இது நேற்று மாலை டாலரின் மதிப்புடன் ஒப்பிடுகையில் 37 பைசா குறைவு.

(நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.49.31).


இந்தியா உட்பட ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளின் சரிவு, அத்துடன் டாலருக்கு நிகரான யூரோ போன்ற நாணயங்களின் மதிப்பு அதிகரிப்பு, ஆகிய காரணங்களினால் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

பிறகு வர்த்தகம் நடக்கையில் ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்து டாலரின் மதிப்பு அதிகரித்தது.

1 டாலர் ரூ. 49.68/49.70 முதல் ரூ.49.85 வரை விற்பனை செய்யப்பட்டது.

இது நேற்றை இறுதி விலையுடன் ஒப்பிடுகையில் ரூபாயின் மதிப்பு 54 பைசா சரிவு.

டாலரின் மதிப்பு அதிகரித்து கூடிய விரைவில் 1 டாலர் ரூ.50 என்ற அளவை எட்டிவிடும் என்று தெரிகிறது.

ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அந்நியச் செலவாணி மதிப்பு விபரம்:
1 டாலரின் மதிப்ப ரூ. 49.79 பைசா.
1 யூரோ மதிப்ப ரூ.63.91
100 யென் மதிப்ப ரூ.50.81
1 பவுன்ட் ஸ்டெர்லிங் ரூ.81.27



Share this Story:

Follow Webdunia tamil