Publish Date: Mon, 20 Oct 2008 (14:28 IST)
Updated Date: Mon, 20 Oct 2008 (14:28 IST)
டாலருக்கு நிகராண ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்துவந்த நிலையில், அந்நியச் செலாவணி சந்தையில் டாலர் நிகரான ரூபாயின் மதிப்பு இன்று காலை 18 காசு உயர்ந்து ரூ.48.72 ஆக அதிகரித்தது.
அந்நியச் செலாவணிச் சந்தையில் டாலர் வரத்து அதிகரித்ததும், பங்குச் சந்தைகளில் அந்நிய நேரடி முதலீட்டு நிறுவனங்கள் (FII) முதலீடு அதிகரிக்கும் என்ற எதிர்பார்பின் காரணமாகவும் ரூபாயின் மதிப்பு உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.