Publish Date: Fri, 22 Aug 2008 (12:43 IST)
Updated Date: Fri, 22 Aug 2008 (12:41 IST)
அன்னிய செலாவணி சந்தையில் இன்று காலை டாலரின் மதிப்பு 15 பைசா குறைந்தது.
காலையில் வர்த்தகம் தொடங்கும் போது 1 டாலரின் மதிப்பு ரூ.43.53/54 ஆக இருந்தது. நேற்றைய இறுதி விலை 1 டாலர் ரூ.43.51-43.52.
ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவதை தடுக்க ரிசர்வ் வங்கி தலையிட்டு டாலரை விற்பனை செய்தது. இதனால் ரூபாயின் மதிப்பு அதிகரித்தது. வர்த்தகம் நடக்கும் போது 1 டாலர் ரூ.43.36/43.37 என்ற அளவில் விற்பனையானது. இது நேற்றைய இறுதி நிலவரத்தைவிட 15 பைசா குறைவு.
மற்ற நாட்டு அந்நியச் செலாவணி சந்தையிலும் டாலரின் மதிப்பு குறைந்தது. அத்துடன் வங்கிகளும் டாலரை விற்பனை செய்தன. இதனால் இங்கு இதன் மதிப்பு குறைந்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
Webdunia
Publish Date: Fri, 22 Aug 2008 (12:43 IST)
Updated Date: Fri, 22 Aug 2008 (12:41 IST)