Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்செக்ஸ் 112 - நிஃப்டி 15 புள்ளி உயர்வு!

Advertiesment
சென்செக்ஸ் 112 - நிஃப்டி 15 புள்ளி உயர்வு!
, புதன், 6 ஆகஸ்ட் 2008 (17:21 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள் நண்பகல் 2 மணிக்கு பிறகு எல்லா பிரிவு பங்குகளின் விலைகளும் குறைந்தன.

இறுதியில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 112.47 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,073.54 ஆக அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 14.70 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 4517.55 ஆக அதிகரித்தது.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளில் சிலவற்றில் குறியீட்டு எண்கள் குறைந்தும், சிலவற்றில் அதிகரித்தும் இருந்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100- 1.20 புள்ளி குறைந்தது.

மும்பை, தேசிய பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1226 பங்குகளின் விலை அதிகரித்தது. 1444 பங்குகளின் விலை குறைந்தது. 76 பங்குகளின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் பிரிவு 11.54 பி.எஸ்.இ100- 14.63 பி.எஸ்.இ 200-3.22 பி.எஸ்.இ-500 8.36 புள்ளி அதிகரித்தது.
ஆனால் சுமால் கேப் 48.66 புள்ளி குறைந்தது.

இன்று நடந்த வர்த்தகத்தில் உலோக உற்பத்தி, பொதுத்துறை, மின் உற்பத்தி, ரியல் எஸ்டேட் பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

தேசிய பங்குச் சந்தையிலசி.என்.எக்ஸ். ஐ.டி 76.45, சி.என்.எக்ஸ்.100- 47.35, சி.என்.எக்ஸ். டிப்டி 32.30, சி.என்.எக்ஸ். 500- 2.70, சி.என்.எக்ஸ்.மிட் கேப் 2.00 புள்ளி அதிகரித்தது.

நிஃப்டி ஜூனியர் 99.50, பாங்க் நிஃப்டி 10.50 மிட் கேப் 50- 20.70 புள்ளி குறைந்தது.

நிஃப்டி பிரிவில் உள்ள பங்குகளில் மாருதி 6.14%, டாடா மோட்டார்ஸ் 5.04%, டி.சி.எஸ் 3.72 %, ஏ.சி.சி 3.53%, பர்தி ஏர்டெல் 3.49%, டாடா கம்யூனிகேஷன்ஸ் 3.45% விலை அதிகரித்தது.

நேஷனல் அலுமினியம் 5.24%, ஹெச்.சி.எல் டெக் 4.73%, டாடா ஸ்டீல் 4.44%, எஸ்.பி.ஐ 3.79% சீமென்ஸ் 3.64% விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil