அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து காணப்பட்டது.
அன்னியச் செலாவணி சந்தையில் நேற்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 42.81 /82 ஆக காணப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து 42.66 /67 ஆக காணப்பட்டது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் ஏற்பட்ட சரிவே ரூபாய் மதிப்பு உயர்வுக்கு முக்கிய காரணம் என பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.