Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம்!

Advertiesment
sensex Bombay national stock exchange niffty
, வெள்ளி, 13 ஜூன் 2008 (11:10 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலை வர்த்தகம் ஆரம்பிக்கும் போது அதிகரித்த குறியீட்டு எண்கள், பத்தாவது நிமிடத்திலேயே சரிய ஆரம்பித்தன.

எல்லா பிரிவு குறியீட்டு எண்களும் அதிக அளவு ஏற்ற இறக்கத்துடன் உள்ளன. ரியல் எஸ்டேட், உலோக உற்பத்தி நிறுவனங்களின் பங்குகள் அதிக அளவு பாதிக்கப்பட்டன. வங்கி பிரிவு பங்குகள் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும் பாதிப்‌பி‌ற்கு உள்ளாகவில்லை.

காலை 10.05 மணி நிலவரப்படி சென்செக்ஸ் 21 புள்ளி அதிகரித்து குறியீட்டு எண் 15,271.71 ஆக இருந்தது.

தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 1 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4,538.75 ஆக இருந்தது.

ஆசியாவில் மற்ற நாட்டு சந்தைகளில் காலையில் சிலவற்றில் அதிகரித்தும், சிலவற்றில் குறைந்தும் இருந்தது. நேற்று அமெரிக்கா, ஐரோப்பிய சந்தைகளில் முன்னேற்றம் காணப்பட்டது.

இன்று வாரத்தின் இறுதி நாள் ஆகையால் முதலீட்டு நிறுவனங்கள் இலாப கணக்கு பார்க்க துவங்கும். எனவே அதிக ஏற்ற இறக்கத்துடன் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் 10.45 மணி நிலவரப்படி 1069 பங்குகளின் விலைகள் அதிகரித்து இருந்தது. 819 பங்குகளின் விலைகள் குறைந்து இருந்தன. 58 பங்குகளின் விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லை.

காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 21 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 15,229.00 ஆக இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 20.55 புள்ளி குறைந்து குறியீட்டு எண் 4518.85 ஆக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 14.54, சுமால் கேப் 46.07 புள்ளி அதிகரித்து இருந்தது. ஆனால் பி.எஸ்.இ. 500- 8.19 புள்ளி குறைந்தது.

நேற்று நடந்த வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,164.42 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.4,375.20 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன. இவை நிகரமாக ரூ.1,211.20 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தன.

உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,135.43 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கின. இவை ரூ.634.99 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன. நிகரமாக ரூ.500.44 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளன.

இந்த வருட துவக்கத்தில் இருந்து நேற்று வரை அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.54,089.19 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்துள்ளன.

ஐரோப்பிய பங்குச் சந்தைகளிலும் நேற்று குறியீட்டு எண்கள் அதிகரித்தன. பிரிட்டனின் எப்.டி.எஸ்.இ 100-67.20 புள்ளி உயர்ந்தது.

அமெரிக்க பங்குச் சந்தையில் நேற்று நடந்த வர்த்தகத்தில் டோவ் ஜோன்ஸ் 57.81, எஸ் அண்ட் பி 500-4.38, நாஸ்டாக் 10.34 புள்ளி குறைந்தது.

இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும் போது ஜப்பான் பங்குச் சந்தையின் நிக்கி 34.61, தென் கொரியாவின் சியோல் காம்போசிட் 5.36 புள்ளி அதிகரித்து இருந்தது.

ஆனால் சிங்கப்பூரின் ஸ்டெய்ர்ட் டைம்ஸ் 14.28, ஹாங்காங்கின் ஹாங்செங் 172.80, சீனாவின் சாங்காய் காம்போசிட் 37.93 புள்ளி குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil