Newsworld Finance Market 0804 02 1080402075_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை சென்செக்ஸ் 123 புள்ளி அதிகரிப்பு!

Advertiesment
மும்பை பங்குச் சந்தை இந்தியா அமெரிக்கா ஐரோப்பா தங்கம் பிளாட்டினம்
, புதன், 2 ஏப்ரல் 2008 (18:27 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கிய போது அதிகரித்த குறைந்த குறியீட்டு எண்கள், படிப்படியாக குறைந்தன. ஆனால் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட குறையவில்லை.

இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன. சீன பங்குச் சந்தையில் மட்டும் சிறிதளவு குறைந்து இருந்தது.

தங்கம், பிளாட்டினம் போன்ற அரிய உலோகங்களிலும், பெட்ரோலிய கச்சா எண்ணெய் சந்தையிலும், பண்டக சந்தையிலும் முதலீடு செய்திருந்த ஹெட்ஜ் பண்டுகள் உட்பட பல்வேறு பிரிவு முதலீட்டாளர்களின் பார்வை பங்குச் சந்தைகளின் பக்கம் திரும்பியுள்ளது. இதனால் எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் இறுதியில் 123.78 புள்ளிகள் அதிகரித்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 14.65 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையின் சுமால் கேப் 50.38, மிட் கேப் 17.67,பி.எஸ்.இ. 500- 39.45 புள்ளி அதிகரித்தது.

தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஜூனியர் 75.30, சி.என்.எக்ஸ். ஐ.டி. 85.30, பாங்க் நிஃப்டி 164.60, சி.என்.எக்ஸ். 100-18, சி.என்.எக்ஸ் 500- 18.05, சி.என்.எக்ஸ். மிட் கேப் 23.70, சி.என்.எக்ஸ். மிட் கேப் 50-23.75 புள்ளிகள் குறைந்தன. சி.என்.எக்ஸ். டிப்டி மட்டும் 9.60 புள்ளி அதிகரித்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று நடந்த வர்த்தகத்தில் 1,764 பங்குகளின் விலை அதிகரித்தது, 909 பங்குகளின் விலை குறைந்தது, 48 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

ரியல் எஸ்டேட் 0.46%, தகவல் தொழில் நுட்ப பிரிவு 0.2.93%, வாகன உற்பத்தி பிரிவு 1.56%, தொழில்நுட்ப பிரிவு 2.04%, வங்கி பிரிவு 2.34% அதிகரித்தது.

மின் உற்பத்தி பிரிவு 0.49%, உலோக உற்பத்தி பிரிவு 2.15%, பொதுத்துறை நிறுவனங்கள் 0.11%,நுகர்வோர் பொருட்கள் பிரிவு 0.46%,பெட்ரோலிய நிறுவனங்களின் பிரிவு 0.25% குறைந்தன.

Share this Story:

Follow Webdunia tamil