Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை 383 புள்ளிகள் சரிவு

Advertiesment
பங்குச் சந்தை மும்பை
, புதன், 16 ஜனவரி 2008 (19:14 IST)
மும்பை, தேசிய பங்குச் சந்தைகள் காலையில் இருந்தே சரிவை சந்தித்தன. இன்று வர்த்தகம் முடியும் நேரத்திற்கு சிறிது முன்பாக நிலைமை சாதகமாக திரும்பியது ஆனால் நேற்றைய இறுதி நிலவரத்தைவிட மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 382.98 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 138.50 புள்ளிகள் குறைந்தன.
இரண்டு பங்குச் சந்தைகளிலும் எல்லா பிரிவு பங்குகளின் குறியீட்டு எண்கள் சரிவை சந்தித்தன.

இந்தியாவில் மட்டுமல்லாமல், சிங்கப்பூர் பங்குச் சந்தையை தவிர எல்லா நாட்டு பங்குச் சந்தைகளிலும் குறியீட்டு எண்கள் குறைந்தன. டோக்கியோ மற்றும் நியூயார்க் தங்கம், வெள்ளி சந்தையில் கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை அதிகரித்து வந்தது. ஆனால் இன்று விலை குறைந்தது. இதில் முதலீடு செய்திருந்தவர்கள் தங்கத்தை விற்பனை செய்ததே விலை குறைவதற்கு காரணம்.

எனவே, இந்த முதலீட்டாளர்கள் நாளை பங்குச் சந்தை பங்கம் முதலீடு செய்ய வாய்ப்பு உண்டு. இதனால் நாளை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளிலும் பங்குச் சந்தையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

மும்பை பங்குச் சந்தையின் மிட் கேப் 164.69 புள்ளிகளும், சுமால் கேப் 233.08, பி.எஸ்.இ-500 164.81 புள்ளிகள் குறைநதன.

தேசிய பங்குச் சந்தையில் குறியீட்டு எண் 0.53 முதல் 2.26 விழுக்காடு வரை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் இன்போசியஸ், ஐ.டி.சி, எல்.அண்ட்.டி, மாருதி, என்.டி.பி.சி, ஒ.என்.ஜி.சி, ரான்பாக்ஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டாடா ஸ்டீல், விப்ரோ, ஏ.சி.சி, அம்புஜா சிமெண்ட், டாடா மோட்டார்ஸ், விப்ரோ, பஜாஜ் ஆட்டோ, ஹெச்.டி.எப்.சி, ஹெச்.டி.எப்.சி வங்கி, டி.எல்.எப், கிரேசம், ஹிந்துஸ்தான் யூனிலிவர் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது. எஸ்.பி.ஐ, டி.சி.எஸ், பார்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, சிப்லா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

Share this Story:

Follow Webdunia tamil