Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்!

Advertiesment
பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்!

Webdunia

, வியாழன், 13 டிசம்பர் 2007 (11:19 IST)
பங்குச் சந்தைகளில் காலையில் வர்த்தகம் தொடங்கும் போதே பங்குகளின் விலைகள் அதிகரித்தன. மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 58.55 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 20,434.42 ஆக உயர்ந்தது. மிட் கேப், சுமால் கேப் பிரிவு பங்குகளின் விலையும் அதிகரித்தன.

அதே நேரத்தில் தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 6 புள்ளிகள் குறைந்து குறியீட்டு எண் 6153 ஆக குறைந்தது.
இன்று இரண்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலைகள் அடிக்கடி மாற்றத்திற்கு உள்ளாகி வருகிறது. நேற்று எல்லா பங்குச் சந்தைகளும் சரிவை சந்தித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 10.30 மணியளவில் சென்செக்ஸ் 97.07 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 20,472.94 ஆக இருந்தது. மிட் கேப் 117.01, சுமால் கேப் 236.77, பி.எஸ்.இ-500 62.29 புள்ளிகள் அதிகரித்தன.
தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி 8.45 புள்ளிகள் அதிகரித்து குறியீட்டு எண் 6167.75 ஆக இருந்தது. வங்கி, தகவல் தொழில் நுட்பம், சி.என்.எக்ஸ் 100 பிரிவு குறியீட்டு எண்கள் குறைந்தன.

சென்செக்ஸபிரிவில் உள்ள பங்குகளிலஏ.சி.சி, பஜாஜ் ஆட்டோ, சிப்லா, டி.எல்.எப், ஹின்டால்கோ, மாருதி, மகேந்திரஅண்ட் மகேந்திரா, எஸ்.பி.ஐ, டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஹிந்துஸ்தான் யூனிலிவர், எல்.அண்ட்.டி, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ்,ரிலையன்ஸ் எனர்ஜி, டி.சி.எஸ் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது. என்.டி.பி.சி, சத்யம், பார்தி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, என்.டி.பி.சி, விப்ரோ ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil