Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்

Advertiesment
பங்குச் சந்தை ஏற்ற இறக்கம்
, செவ்வாய், 20 நவம்பர் 2007 (14:43 IST)
மும்பை பங்குச் சந்தை காலையில் வர்த்தகம் தொடங்கியவுடன் சென்செக்ஸ் 136 புள்ளிகள் சரிந்தன. தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும் 65.19 புள்ளிகள் குறைந்தது.

அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் அதிகளவு சென்செக்ஸ், நிப்டி பிரிவு பங்குகளை விற்பனை செய்தனர். இதனால் சென்செக்ஸ் 136 புள்ளிகளும், நிப்டி 65 புள்ளிகளும் குறைந்ததாக தரகர்கள் தெரிவித்தனர்.

மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளிலும் பங்குகளின் விலை குறைந்து குறியீட்டு எண்கள் குறைந்தன. இதன் பிரதிபலிப்பு இந்திய பங்குச் சந்தைகளிலும் தெரிந்ததாக பங்குச் சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

காலை 12 மணி வரை பங்குகளின் விலைகள் குறைந்தது. அதற்கு பிறகு சிறிது மாற்றம் தென்பட்டது. 12.15 மணியளவில் சென்செக்ஸ் 78 புள்ளிகள் அதிகரித்து 19711.45 புள்ளிகளாக இருந்தது. இதே போல் தேசிய பங்குச் சந்தையின் நிப்டி 12.61 புள்ளிகள் உயர்ந்து 5920.26 புள்ளிகளாக இருந்தது.

மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் பிரிவு பங்குகள் விலை குறைந்தாலும் மற்ற பிரிவு பங்குகளின் விலை பாதிக்கப்படவில்லை. மிட்கேப் 107.93 புள்ளிகள், சுமால் கேப் 203.57 புள்ளிகள், பி.எஸ்.இ-500 41.81 புள்ளிகள் அதிகரித்து இருந்தது.

தேசிய பங்குச் சந்தையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பிரிவு தவிர மற்ற பிரிவுகளின் குறியீட்டு எண்கள் அதிகரித்தன.

சென்செக்ஸ் பிரிவில் உள்ள பங்குகளில் ஏ.சி.சி, அம்புஜா சிமென்ட், பஜாஜ் ஆட்டோ, சிப்லா, ஹின்டால்கோ, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, எல் அண்ட் டி, ஒ.என்.ஜி.சி, என்.டி.பி.சி, எஸ்.பி.ஐ, ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் எனர்ஜி, ஹிந்துஸ்தான் யூனிலிவர், டாடா மோட்டார், டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் விலை அதிகரித்தன.

டி.சி.எஸ், விப்ரோ, ஹெச்.டி.எப்.சி வங்கி, பார்தி ஏர்டெல், டி.எல்.எப், ஹெச்.டி.எப்.சி, மாருதி, மகேந்திரா அண்ட் மகேந்திரா, சத்யம், பி.ஹெச்.இ.எல் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை குறைந்தது.

Share this Story:

Follow Webdunia tamil