Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம்!

பங்குச் சந்தையில் ஏற்ற இறக்கம்!

Webdunia

, புதன், 24 அக்டோபர் 2007 (13:22 IST)
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் (சென்செக்ஸ்) காலையில் வர்த்தகம் ஆரம்பித்தவுடன் சென்செக்ஸ் அதிகரித்து. காலை 11 மணியளவில் சென்செக்ஸ் பட்டியல் பங்குகளின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டதால் குறைய தொடங்கியது!

11.20 மணியளவில் சென்செக்ஸ் 44.69 புள்ளிகள் குறைந்து 18,448.15 புள்ளிகளாக இருந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 18,492.84)

பிற்பகல் 1.00 மணி நிலவரப்படி 18,458.36 ஆக உள்ளது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 34.48 புள்ளிகள் குறைவாகும். நிப்டி 5,459.40, நேற்றை விட 14 புள்ளிகள் குறைவு.

ஆனால் மற்ற பிரிவு பங்குகளில் அதிக மாற்றமில்லை. மும்பை பங்குச் சந்தையின் மிட்கேப், சுமால் கேப், ி.எஸ்.இ 100, 200, 500 ஆகிய பிரிவு பங்குகளின் குறியீட்டு எண் குறையவில்லை. நேற்றைய இறுதி நிலவரத்தை விட அதிகமாகவே இருந்தது.

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் காலையில் நிப்டி உயர்ந்தது. வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே நிப்டி குறியீட்டு எண் குறைய தொடங்கியது. 10.50 மணியளவில் நிப்டி குறியீட்டு எண் குறைய ஆரம்பித்தது. 11 மணியளவில் நிப்டி 5,419 புள்ளிகளாக இருந்தது. இது நேற்றைய இறுதி நிலவரத்தை விட 64 புள்ளிகள் குறைவு (நேற்றைய இறுதி நிலவரம் 5473.70)

சென்செக்ஸ் பிரிவுகளில் உள்ள பங்குகளில் ஒ.என்,ி.ி, ரான்பாக்ஸி, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், டாடா மோட்டார்ஸ், ி.ி.எஸ், விப்ரோ, ஏ.ி.எல், பஜாஜ் ஆட்டோ, பிஹெச். இ.எல், டாக்டர் ரெட்டி, கிரேசம், ஹிந்துஸ்தான் யூனிலிவர், இன்போசியஸ், ஐ.ி.சி ஆகிய பங்குகளின் விலை குறைந்தன.

எல் அண்ட் டி, என்.ி.ி.ி, ரிலையன்ஸ் எனர்ஜி, சத்யம், ஸ்டேட் பாங்க், டாடா ஸ்டீல், ஏ.ி.ி, பர்தி ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை அதிகரித்தது.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியத்தின் (செபி) இயக்குநர்கள் குழுக் கூட்டம் நாளை நடை பெறுகிறது. இதில் பங்குச் சந்தையில் அந்நிய நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்ற விதிகளை வகுப்பது பற்றி ஆராயப்பட உள்ளது.

சென்ற வாரம் புதன் கிழமை பங்குகளி்ன் விலைகள் சரிந்து, ஒரு மணிநேரம் பங்குச் சந்தை மூடப்பட்டது.

இந்த நிலைமைக்கு காரணம் பங்கேற்பு பத்திரங்கள் மூலம் முதலீடு செய்யப்படுவதே. இதை ஒழுங்குபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்ற செவ்வாய்க் கிழமை செபி அறிவித்ததே.

Share this Story:

Follow Webdunia tamil