Publish Date: Fri, 24 Aug 2007 (12:10 IST)
Updated Date: Fri, 24 Aug 2007 (12:09 IST)
சர்வதேச சந்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும், அன்னிய முதலீடுகளின் அதிகரிப்பும் இந்திய பங்குச் சந்தைகளில் ஏற்றத்தை தந்துள்ளது.
மும்பைப் பங்குச் சந்தை குறியீடு நேற்றைய வர்த்தகத்தில் 360 புள்ளிகள் உயர்ந்து, வர்த்தகத்தின் முடிவில் 85 புள்ளிகள் குறைந்தது.
இன்றைய காலை வர்த்தகம் துவங்கிய 5 நிமிடத்தில் 152 புள்ளிகள் உயர்ந்து, 14,316 புள்ளிகளாக அதிகரித்தது.
தேசப் பங்குச் சந்தை குறியீடு 50 புள்ளிகள் அதிகரித்து 4,164 புள்ளிகளாக இருந்தது.
பெல், டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பாங்க், ரிலையன்ஸ் எனர்ஜி, டாடா ஸ்டீல், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், இன்டால்கோ, ஓஎன்ஜிசி பங்குகள் ஏற்றத்தில் உள்ளன.
தற்போதைய நிலவரப்படி 14,270 புள்ளிகளாகவும், தேசப் பங்குச் சந்தை 4,147 புள்ளிகளாவும் உள்ளன.
Webdunia
Publish Date: Fri, 24 Aug 2007 (12:10 IST)
Updated Date: Fri, 24 Aug 2007 (12:09 IST)