Publish Date: Mon, 08 Dec 2008 (12:08 IST)
Updated Date: Mon, 08 Dec 2008 (12:08 IST)
திருச்சி: மேட்டூர் அணையின் நீர் மட்டம் இன்று காலை 85.58 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 7,303 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.
அணையில் இருந்து விநாடிக்கு 3,119 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கல்லணையில் இருந்து காவிரி பாசன பகுதி விவசாய பணிக்காக தண்ணீர் திறந்து விடுவது கொள்ளிடம் தவிர மற்ற ஆறுகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கொள்ளிடம் கால்வாயில் விநாடிக்கு 1,042 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
காவிரி, வென்னார், கல்லணை கால்வாய் ஆகியவைகளில் பாசனத்திற்காக தண்ணீர் விடப்படவில்லை என்று பொதுப் பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.