Publish Date: Sat, 06 Dec 2008 (16:37 IST)
Updated Date: Sat, 06 Dec 2008 (16:37 IST)
பூனா: இந்த ஆண்டு சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்புள்ளது என்று மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.
பூனாவுக்கு அருகே உள்ள மன்சரியில் வசந்த் தத்தா சர்க்கரை ஆய்வு மையம் அமைந்துள்ளது. இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் நேற்று சரத் பவார் பங்கேற்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கடந்த ஆண்டை விட. இந்த வருடம் கரும்பு உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் சர்க்கரை உற்பத்தி குறைய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.