Publish Date: Fri, 14 Nov 2008 (15:12 IST)
Updated Date: Fri, 14 Nov 2008 (15:04 IST)
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து ஆந்திர கடற்கரையை நோக்கி நகர்வதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு ஆந்திராவிலும், தமிழ்நாட்டிலும் பலத்த மழையோ அல்லது மிக பலத்த மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் இருந்து கிழக்கு தென் கிழக்கே 520 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்து பெரும் காற்றழுத்த தாழ்வு மண்டலாக உருப்பெற்றுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மசூலிப்பட்டிணத்தில் இருந்து 600 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ள இந்த காற்றழுத் தாழ்வு நிலை, புயலாக உருவாகி வடமேற்கே ஆந்திராவின் கரையோரத்தை நோக்கி நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களிலும், ஆந்திராவின் கரையோர மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு, மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ள வானிலை ஆய்வு மையம், மீனவர்கள் கடலிற்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.
Webdunia
Publish Date: Fri, 14 Nov 2008 (15:12 IST)
Updated Date: Fri, 14 Nov 2008 (15:04 IST)