Newsworld Finance Agriculture 0712 19 1071219019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டிசம்பர் 27 வரை பருவ மழை நீடிக்கும்- மழை ராஜ்

Advertiesment
டிசம்பர் 27 வரை பருவ மழை நீடிக்கும்- மழை ராஜ்
தற்பொழுது தமிழகம் எங்கும் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கும் பருவ மழை டிசம்பர் 27ஆம் தேதி வரை நீடிக்கும் வாய்ப்பு உள்ளது என்று மழையைப் பற்றி ஆய்வு செய்து வரும் பெரம்பலூர் மழை ராஜ் கூறியுள்ளார்.

இம்மாதம் 18, 19 தேதிகளில் பலத்த மழை பெய்யும் என்று இம்மாதத் துவக்கத்திலேயே தெரிவித்த மழை ராஜ், இன்று நாகை உள்ளிட்ட தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று கூறியுள்ளார்.

கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுச்சேர், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும், மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறியுள்ளார்.

இந்த ஆண்டு கடலூர் மாவட்டம் தான் மிக அதிகமான மழையைப் பெறும் என்று ஏற்கனவே இவர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலு‌ம், டிச‌ம்ப‌ர் மாத‌ம் 19 ம‌ற்று‌ம் 28ஆ‌ம் தே‌திக‌ள் பல‌த்த ‌‌நிலநடு‌க்க‌ம் ஏ‌ற்படு‌ம் தே‌திகளாகு‌ம் எ‌ன்று‌ம் தனது ஆ‌ய்‌வி‌ல் மழை ரா‌ஜ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil