Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஊனமுற்றோருக்கு கணினிப் பயிற்சி!

Advertiesment
ஊனமுற்றோருக்கு கணினிப் பயிற்சி!
, செவ்வாய், 30 செப்டம்பர் 2008 (17:18 IST)
காஞ்சீபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊனமுற்றோருக்கு உதவித்தொகையுடன் கூடிய கணினிப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கான தேர்வு வரும் 14 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தோஷ் கே.மிஸ்ரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ் நாடு ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை, ஊனமுற்றோருக்கு சிறப்பு தொழிற்பயிற்சிகளை அளிக்கவுள்ளது. இதன்படி கை, கால் ஊனமுற்றவர்கள், காது கேளாதோருக்கான 6 மாத கணினி பயிற்சி, பல்லாவரம் மீனாட்சி கிருஷ்ணன் தொழில்நுட்ப கல்லூரியில் வழங்கப்பட இருக்கிறது.

இதேபோல், சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் தேசிய நிறுவனத்தின் வட்டார நிலையத்தில் பார்வையற்றோருக்கு 6மாத கணினி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் சேருவதற்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கை, கால் ஊனம், காது கேளாதவர்களுக்கு செங்கல்பட்டு மருத்துவ கல்லூரியில் 2 ஆண்டு 'ஆய்வுக்கூட தொழில்நுட்ப பட்டய படிப்பு' நடத்தப்படுகிறது. இந்த வகுப்புகள் வரும் 15 ஆம் தேதி முதல் தொடங்கும்.

பிளஸ் 2 வகுப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது உயிரியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இதில் சேரலாம். விண்ணப்பதாரர்கள் 17 வயது முதல் 30-க்குள் இருக்க வேண்டும்.

இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் வரும் 14 ஆம் தேதியன்று செங்கல்பட்டில் உள்ள மாவட்ட மறுவாழ்வு மையத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்விற்கு, தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்களுடன் வர வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil