மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (U.P.S.C.) நடத்தும் 2008ஆம் ஆண்டுக்கான மத்திய காவல் படைகள் (உதவி கமாண்டன்ட்) தேர்வு வரும் அக்டோபர் மாதம் 5ஆம் தேதி நடைபெறுகிறது.
இத்தேர்வு நாடு முழுவதும் சென்னை உள்பட 41 மையங்களில் நடக்க உள்ளது. இதற்கான அனுமதிச் சான்றிதழ் தேர்வு எழுதுபவர்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கும், அதற்கான காரணத்துடன் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுபவர்களுக்கான அனுமதிச் சான்றிதழ் மற்றும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கான கடிதம் கிடைக்கப்பெறாதவர்கள் 011-23386281 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது 011-23387310 என்ற தொலைநகல் எண் மூலமாக தொலை நகல் (Fax) அனுப்பியும் கேட்டறியலாம்.
இது பற்றி மேலும் விவரம் தேவைப்படுபவர்கள் புது டெல்லியில் உள்ள மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவி மையத்தை 011-23385271, 011-23381125, 011-23098543 என்ற தொலைபேசி எண்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்து வேலை நாட்களிலும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.
தேர்வு மையம் மற்றும் நடைபெறும் இடங்கள் பற்றிய விவரங்களை தேர்வாணையத்தின் இணைய தளமான http://www.upsc.gov.in மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.