Publish Date: Wed, 09 Jul 2008 (12:50 IST)
Updated Date: Wed, 09 Jul 2008 (12:50 IST)
எல்.ஐ.சி. உதவியாளர் மற்றும் பணத்தை கையாள்பவர்கள் பணிக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது.
எல்.ஐ.சி.யில் மொத்தம் காலியிடங்கள் 974, அதில் தென் மண்டல பிரிவில் உதவியாளர் மற்றும் கேஷியர் வேலைக்குரிய 334 காலி இடங்களுக்கு எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இது பற்றிய அறிவிப்பு ``எம்பிளாயிமெண்ட் நிïஸ்'' (ஜுன் மாதம் 28 - ஜுலை மாதம் 4-ந் தேதி தேதியிட்ட) வார ஆங்கில இதழில் வெளியாகியுள்ளது. விண்ணப்பங்களை எல்.ஐ.சி. ஆப். இந்தியா, பெங்களூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப 15.7.08 கடைசி நாளாகும்.
31.8.08 (ஞாயிற்றுக் கிழமை) அன்று தேர்வு நடத்தப்படும்.
18 வயது முதல் 30 வயதுக்கு மிகாதவர்கள் விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தேர்வை எழுதி முடிவுக்காக காத்திருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால் நேர்முகத் தேர்வுக்கு வரும்போது தேர்ச்சி பெற்றதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும்.