Publish Date: Wed, 28 Jan 2009 (14:44 IST)
Updated Date: Wed, 28 Jan 2009 (14:44 IST)
குடியரசு தினத்தை முன்னிட்டு புழல் மத்திய சிறையில், நூறுக்கு நூறு அடிப்படைக் கல்வி திட்ட துவக்க விழா நடைபெற்றது.
சிறைத்துறை தலைமை இயக்குநர் நடராஜ் விழாவிற்கு தலைமை தாங்கினார். சிறைத் துறை துணைத் தலைவர் துரைசாமி வரவேற்றார்.
சுதந்திர போராட்ட தியாகி கல்யாணம், தேசியக் கொடியை ஏற்றி வைத்து நூற்றுக்கு நூறு அடிப்படைக் கல்வித் திட்டத்தை துவக்கி வைத்தார்.