Publish Date: Sat, 27 Sep 2008 (12:23 IST)
Updated Date: Sat, 27 Sep 2008 (12:23 IST)
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் பல்வேறு படிப்புகளுக்கான நீட்டிக்கப்பட்ட கலந்தாய்வு வரும் 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜிப்மர் மருத்துவமனையின் கல்விப்பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வரும் 29-ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு ஜிப்மர் மருத்துவமனையில் உள்ள நிர்வாகக் கட்டடத்தில் பல்வேறு படிப்புகளுக்கான நீட்டிக்கப்பட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
இதன்படி பி.எஸ்.சி.(நர்சிங்) படிப்புக்கு 5 இடங்களுக்கும், பி.எஸ்.சி.(மெடிக்கல் லேப் டெக்னாலஜி) படிப்புக்கு 13 இடங்களுக்கும் , பிரி ஹாஸ்பிடல் ட்ரோமா டெக்னீஷியன் படிப்புக்கு 19 இடங்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும்.
கடந்த ஜூலை 20 ஆம் தேதி நடைபெற்ற நுழைவுத்தேர்வு மூலம் தேர்வானவர்களின் பெயர்ப் பட்டியல், ஜிப்மர் மருத்துவமனையின் நிர்வாக அறிவிப்புப் பலகையிலும், அதன் இணையதளத்திலும் மாணவர்கள் காணலாம்.
Webdunia
Publish Date: Sat, 27 Sep 2008 (12:23 IST)
Updated Date: Sat, 27 Sep 2008 (12:23 IST)