Publish Date: Tue, 30 Dec 2008 (14:25 IST)
Updated Date: Tue, 30 Dec 2008 (14:24 IST)
சென்னை தரமணியில் உள்ள தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவன படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பங்களைப் பெற டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பங்கள் தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் மற்றும் ஆக்ஸிஸ் வங்கியின் தேர்வு செய்யப்பட்ட கிளைகளில் கிடைக்கும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஜனவரி 7ஆம் தேதியாகும். இப்படிப்பிற்கான நுழைவுத் தேர்வு பிப்ரவரி 8ஆம் தேதி நடக்கிறது.
நுழைவுத் தேர்வில் வெற்றிபெறுபவர்களுக்கான நேர்முகத் தேர்வு ஏப்ரல் - மே மாதத்தில் நடைபெறும்.