Publish Date: Mon, 21 Jul 2008 (16:24 IST)
Updated Date: Mon, 21 Jul 2008 (16:24 IST)
வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் பி.ஏ. பயன்முறைத் தமிழ் என்ற புதிய படிப்பை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இந்த கல்வியாண்டில் தொடங்குகிறது.
கணினித் தமிழ், மொழிபெயர்ப்புக் கலை, ஆட்சித் தமிழ், தமிழ் கற்பித்தல், மொழித் திறன், ரேடியோ, டி.வி. கலை, இதழியல், இலக்கியத் திறனாய்வு, படைப்பிலக்கியம் ஆகியவை இந்தப் படிப்பில் கற்பிக்கப்படுகின்றன.
இந்தப் படிப்பு தொடர்பான மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள சென்னையில் உள்ள மிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தை மாணவ-மாணவிகள் அணுகலாம். மேலும் 044 - 2235 1414 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.