Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க என்ன செய்யவேண்டும்...?

சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்க என்ன செய்யவேண்டும்...?
சிறுநீரக கற்களானது உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லாவிட்டாலும், ஒருசில உணவுகளை அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் போதும் ஏற்படும். சிறுநீரக  கற்கள் உருவாகாமல் இருக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்றும், சிறுநீரக கற்கள் உருவாவதைத் எவ்வாறு தடுக்கலாம் என்றும் பார்க்கலாம்.

சிறுநீரக கற்கள் உருவாகாமல் இருக்க வேண்டுமானால், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும். அதிலும் ஒரு நாளைக்கு 8 டம்ளர் தண்ணீர் குடிப்பது மிகவும்  அவசியமானது.
 
சிட்ரஸ் பழங்களான எலுமிச்சை, ஆரஞ்சு போன்றவற்றால் செய்யப்பட்ட ஜூஸ் குடித்து வருவதும் நல்லது. ஏனெனில் இவையும் சிறுநீரக கற்கள் உருவாவதைத்  தடுக்கக்கூடியவை ஆகும்.
 
உடலில் சோடியத்தின் அளவு அதிகரித்தால், சிறுநீரக கற்கள் உருவாகும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே உணவில் சோடியம் நிறைந்த உப்பை குறைவாக சேர்த்து வருவது, சிறுநீரக கற்கள் உருவாவதை தடுப்பதுடன், உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமலும் இருக்கும்.
 
மாட்டிறைச்சி, முட்டை, கோழி போன்றவற்றை அளவாக எடுத்து வந்தால், சிறுநீரக கற்கள் ஏற்படுவதைத் தடுக்கலாம். ஏனெனில் இவற்றில் விலங்குகளின் புரோட்டீன் அளவுக்கு அதிகம் இருப்பதால், அவை யூரிக் ஆசிட்டின் அளவு அதிகரித்து, உடலில் உள்ள சிட்ரேட்டின் அளவை குறைத்து, சிறுநீரக கற்களை  ஏற்படுத்தும். எனவே இந்த அசைவ உணவுகளை அளவாக எடுத்து வருவது மிகவும் நல்லது.
 
சிறுநீரக கற்கள் இருப்பவர்கள், ஒரு வாரம் தொடர்ந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு ஜூஸ் குடித்து வந்தால், சிறுநீரகக்கற்கள்  கரைந்துவிடும்.
 
சில வகையான உணவுப் பொருட்கள் சிறுநீரக கற்களை உருவாக்கும். அந்த உணவுப் பொருட்கள் என்னவென்று தெரிந்து கொள்வது அவசியம். அந்த உணவுகளாவன பீட்ரூட், பசலைக்கீரை மற்றும் சாக்லெட் போன்றவையும், ஆக்சலேட் அதிகம் நிறைந்த நட்ஸ் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்த கோலாக்கள்  போன்றவையும் சிறுநீரக கற்கள் உருவாக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கோவைக்காய் வறுவல் செய்ய !!