Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சாலையில் தொழிலதிபரை சுட்டுக் கொன்ற இளைஞர் !

Webdunia
புதன், 25 செப்டம்பர் 2019 (21:03 IST)
டெல்லியில் உள்ள துவாரகாவில்,  பிரதான சாலையில் , ஒரு இளைஞர் தொழிலதிபரை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள துவாரகாவில் இன்று பட்டபகலில்,. ஒரு இளைஞர் தனது முகத்தை ஒரு துணியால் மறைத்துக் கொண்டு, ஒரு தொழிலதிபரை ஓட ஓட சுட்டுக் கொன்றார். பல வாகனங்கள் அந்த சாலையில் நின்றிருந்தன. இருப்பினும் ஒருவரும் அவரை தடுக்க பக்கத்தில் செல்ல முடியவில்லை.
 
இந்நிலையில் இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார்  துப்பாக்கியால் சுடப்பட்டு சாலையில் கிடந்த தொழிலதிபரின் உடலை மீட்டு  , மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 
 
அந்தக் கொலைக் குற்றவாளியை போலீஸார் தேடி வருவதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்த சம்பவம் குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சர் ஆகிறார் ரேகா குப்தா.. இன்று பதவியேற்பு..!

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments