Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ப சிதம்பரத்தின் நீதிமன்றக்காவலை நீட்டித்தது நீதிமன்றம்

ப சிதம்பரத்தின் நீதிமன்றக்காவலை நீட்டித்தது நீதிமன்றம்

Arun Prasath

, வியாழன், 19 செப்டம்பர் 2019 (16:24 IST)
ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ப சிதம்பரத்தின் நீதிமன்றக்காவலை நீட்டித்து உத்தரவிட்டடுள்ளது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.

ஐ என் எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம், இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ப சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலை செப்டம்பர் 30 வரை நீட்டிக்க சிபிஐ தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை வைத்தார். ஆனால் அதனை ப சிதம்பரம் தரப்பு எதிர்த்தது. இதனையடுத்து ப சிதம்பரத்திற்கு அக்டோபர் 3 ஆம் தேதி வரை சிறை நீட்டித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் ப சிதம்பரத்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது என்பதால், அவரது நீதிமன்ற காவலை நீட்டித்ததற்கு அவரது வழிக்கறிஞர் அபிஷேக் சிங்வி எதிர்ப்பு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிகில் பட இசை வெளியீட்டு விழா : ’அரசியல் பிகில்’ அடிப்பாறா விஜய் ?