Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஓராண்டுக்கும் மேலாக வெளியே செல்லவில்லை, ஆனாலும் கொரோனா – ஆச்சர்யத்தில் எழுத்தாளர்!

Advertiesment
ஓராண்டுக்கும் மேலாக வெளியே செல்லவில்லை, ஆனாலும் கொரோனா – ஆச்சர்யத்தில் எழுத்தாளர்!
, செவ்வாய், 11 மே 2021 (16:07 IST)
கொரோனா அச்சம் காரணமாக ஓராண்டுக்கும் மேலாக வெளியே செல்லாத போதும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது ஆச்சர்யத்தை அளித்துள்ளதாக எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் தெரிவித்துள்ளார்.

வங்கதேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரினுக்கு அந்நாட்டில் அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் இந்தியாவில் அடைக்கலமாகி வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் டெல்லியில் இருக்கும் அவருக்கு இப்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து டிவிட்டரில் அவர் ‘நான் கடந்த மார்ச் மாதம் முதல் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. என் வீட்டுக்குள்ளேதான் இருக்கிறேன். யாரையும் வீட்டுக்குள்ளும் விடுவதில்லை. இருந்தும் எனக்கு கொரோனா தொற்று எப்படி வந்திருக்கும் என்பது ஆச்சர்யமாக உள்ளது.’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமரே முதலில் கண்ணாடியை கழட்டுங்கள்: ராகுல்காந்தி ஆவேசம்