Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது! காலையிலேயே விறுவிறுப்பான வாக்குப்பதிவு

Webdunia
வியாழன், 11 ஏப்ரல் 2019 (07:05 IST)
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் இன்று காலை 7 மணி முதல் முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. பொதுமக்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய இன்று அதிகாலை முதலே வரிசையில் நிற்க தொடங்கினர்.
 
மஹாராஷ்ட்ரா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், ஜம்மு காஷ்மீர் உள்பட 20 மாநிலங்களில் உள்ள 91 மக்களவை தொகுதிகளில் இன்று முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அதுமட்டுமின்றி ஆந்திரா, சிக்கிம், ஒடிசா, அருணாச்சலப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தலுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பதட்டமான தொகுதிகள் கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுளது. இன்று நடைபெறும் தேர்தலில் 14,21,61,000 வாக்காளர்கள் உள்ளனர். அதேபோல் 1,279 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

நல்ல மார்க் எடுக்கல.. விரும்பிய பாடம் கிடைக்கல! – விரக்தியில் 10ம் வகுப்பு மாணவர் எடுத்த சோக முடிவு!

தமிழகத்தில் வெளுத்து வாங்கும் மழை..! சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை.! எந்தெந்த இடங்கள் தெரியுமா.?

வடபழனி முருகன் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்..! விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்...!

அதிமுகவில் ஓபிஎஸ் இணைகிறாரா.? ஆர்.பி.உதயகுமார் முக்கிய அப்டேட்.!!

நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது..! சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments