Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் மோடியின் குடும்பம்: வாரணாசி வீடுகளில் வைக்கப்படும் பதாகைகள்..!

Mahendran
செவ்வாய், 5 மார்ச் 2024 (15:05 IST)
பிரதமர் மோடி போட்டியிட போகும் வாரணாசி தொகுதியில் உள்ள வீடுகளில் நாங்கள் மோடியின் குடும்பம் என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கடந்த சில நாட்களுக்கு முன்னால் முன்னாள் பீகார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மோடிக்கு குடும்பம் இல்லை என்று கூறியதை அடுத்து சமீபத்தில் மோடி தனது சமூக வலைதளத்தில் மோடியின் குடும்பம் என்ற அடைமொழியை சேர்ந்திருந்தார்

மேலும் பாஜக தலைவர்களும் நாங்கள் மோடியின் குடும்பம் என்ற அடைமொழியை சேர்த்துவரும் நிலையில் பிரதமர் மோடிக்கு ஆதரவாக அவரது தொகுதி மக்களும் தற்போது இதில் கைகோர்த்துள்ளனர்

உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசியை சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டு வாசலில் ’நாங்கள் மோடியின் குடும்பம்’ என்று எழுதப்பட்ட பதாகைகள் வைக்க தொடங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments