Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா அஜித் பவார்.. உள்ளே வருகிறார் உத்தவ் தாக்கரே..!

Siva
வியாழன், 6 ஜூன் 2024 (08:40 IST)
பாஜக கூட்டணியில் இருந்து அஜித் பவர் வெளியேற இருப்பதாக கூறப்படும் நிலையில் உத்தவ் தாக்கரே பாஜக கூட்டணிக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக கூட்டணிக்கு எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காமல் போனதற்கு மகாராஷ்டிரா மாநிலமும் ஒன்று. இந்த மாநிலத்தில் பாஜக அமைத்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும் காங்கிரஸ் அதனால் தான் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா இணைந்து இந்த தேர்தலை சந்தித்து இருந்தால் கண்டிப்பாக 35 தொகுதிகளுக்கு மேல் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை உணர்ந்து கொண்ட உத்தவ் தாக்கரே மீண்டும் பாஜக கூட்டணிக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இந்த தேர்தலில் தோல்வி அடைந்தது என்பதும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது என்பதும் அஜித் பவாரின் மனைவி கூட படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவு காரணமாக மகாராஷ்டிரா அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட இருப்பதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்களின் சிந்தூரை அரசியலுக்கு பயன்படுத்துவதா? மம்தா, காங்கிரஸ் விமர்சனம்..!

நீட் முதுநிலை தேர்வை ஒரே ஷிப்டில் நடத்த வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு..!

பள்ளிகள் திறப்பு ஜூன் 9ஆம் தேதிக்கு தள்ளி போகிறதா? தமிழக அரசு விளக்கம்..!

ரூ.1.28 கோடி சம்பளம் பெற்றவர் இன்று உணவு டெலிவரி பாய்.. காரணம் AI.. அதிர்ச்சி தகவல்..!

தவறு செய்திருந்தால் மன்னிப்பு கேட்பேன், ஆனால்.. கமல்ஹாசன் பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments