Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறாரா அஜித் பவார்.. உள்ளே வருகிறார் உத்தவ் தாக்கரே..!

Siva
வியாழன், 6 ஜூன் 2024 (08:40 IST)
பாஜக கூட்டணியில் இருந்து அஜித் பவர் வெளியேற இருப்பதாக கூறப்படும் நிலையில் உத்தவ் தாக்கரே பாஜக கூட்டணிக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

பாஜக கூட்டணிக்கு எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காமல் போனதற்கு மகாராஷ்டிரா மாநிலமும் ஒன்று. இந்த மாநிலத்தில் பாஜக அமைத்த கூட்டணிக்கு மக்கள் ஆதரவு இல்லை என்றும் காங்கிரஸ் அதனால் தான் 13 தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் மற்றும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா இணைந்து இந்த தேர்தலை சந்தித்து இருந்தால் கண்டிப்பாக 35 தொகுதிகளுக்கு மேல் கிடைத்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதனை உணர்ந்து கொண்ட உத்தவ் தாக்கரே மீண்டும் பாஜக கூட்டணிக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் இந்த தேர்தலில் தோல்வி அடைந்தது என்பதும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது என்பதும் அஜித் பவாரின் மனைவி கூட படுதோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவு காரணமாக மகாராஷ்டிரா அரசியலில் பெரும் திருப்பம் ஏற்பட இருப்பதாக கூறப்படுவது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகத்தில் இங்கு 4 நாட்களுக்கு டாஸ்மாக் விடுமுறை..!

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments