Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலியல் குற்றவாளிகளை போஸ்டர் அடித்து ஒட்டுங்கள்! – யோகி ஆதித்யநாத் அதிரடி உத்தரவு!

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (08:16 IST)
உத்தர பிரதேசத்தில் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் புகைப்படங்களை சாலையில் போஸ்டர்களாக ஒட்ட முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்தர பிரதேசத்தில் பாஜகவின் யோகி ஆதித்யநாத் ஆட்சி நடந்து வரும் நிலையில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த பாலியல் வன்கொடுமை சம்பவங்களை தடுக்க உத்தர பிரதேச அரசு ஆண்டி ரோமியோ ஸ்குவாட் போன்ற பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தற்போது பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஈவ்டீசிங் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களின் புகைப்படங்களை உத்தரபிரதேசத்தின் பிரதான சாலை சந்திப்புகளில் ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பாலியல் குற்றவாளிகளை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள முடியும் என்பதோடு, குற்றவாளிகளும் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு பயந்து குற்றத்தில் ஈடுபட தயங்குவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்