வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை.. முதல்வர் அதிரடி அறிவிப்பு!

Siva
வியாழன், 18 செப்டம்பர் 2025 (17:40 IST)
பீகார் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்கப்படும் என அதிரடியாக அறிவித்துள்ளார்.
 
கலை, அறிவியல் மற்றும் வணிகத் துறையில் 20 முதல் 25 வயதுக்குட்பட்ட வேலையில்லா பட்டதாரிகள் இந்த உதவித்தொகையை பெறலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
எனினும், இந்த அறிவிப்பு பல்வேறு சமூக ஆர்வலர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை வழங்குவதைவிட, வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான திட்டங்களை அறிவிப்பதே சிறந்த நடவடிக்கை என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 
தேர்தலுக்காக இதுபோன்ற வாக்குறுதிகளை வழங்கி சமூகத்தை கெடுக்க வேண்டாம் என்றும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கினால் அவர்கள் ஆயிரக்கணக்கில் அரசுக்கு வரி வழங்குவார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் ருத்து தெரிவித்துள்ளனர்.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments