Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மோடி என்னை பாராட்டினார்… தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப் பெருமிதம்!

Advertiesment
டர்ம்ப்
, திங்கள், 14 செப்டம்பர் 2020 (09:49 IST)
அமெரிக்க பிரதமர் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்தில் உலகிலேயே அமெரிக்காவில்தான் அதிக கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 68 லட்சத்தைத் தொட்டுள்ளது. பலி எண்ணிக்கையை 2 லட்சத்தை நெருங்குகிறது. அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் கொரோனாவை சரியாக எதிர்கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் நவம்பர் மாதம் நடக்கும் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்துவரும் ட்ரம்ப்  ’உலகிலேயே அதிக கொரோனா சோதனை செய்யும் நாடுகள் பட்டியலில் அமெரிக்காதான் முதலிடத்தில் உள்ளது. உலகின் இரண்டாவது பெரிய மக்கள் தொகைக் கொண்ட நாடான இந்தியாவை விட நாம் 4.5 கோடி சோதனைகள் அதிகமாக செய்துள்ளோம். இதைக் குறிப்பிட்டு இந்திய பிரதமர் மோடி என்னை தொலைபேசியில் பாராட்டினார்’ என தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரே நாளில் 94,372 பேருக்கு கொரோனா: இன்றைய நிலவரம் என்ன??