மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு உள்ளதா?

Webdunia
வெள்ளி, 10 மே 2019 (07:30 IST)
மக்களவை தேர்தலுக்கு முன்னரே காங்கிரஸ், பாஜக அல்லாத மூன்றாவது அணி உருவாக்க ஒருசில தலைவர்கள் முயற்சித்தனர். ஆனால் தேர்தலுக்கு முன் மூன்றாவது அணி அமைக்க ஒருசிலர் உடன்படவில்லை என்பதால் மூன்றாவது உருவாகவில்லை. இது பாஜகவுக்கு எதிரான வாக்குகளை பிரிக்கும் என்பதால் பாஜகவுக்கு சாதகமாகவே கருதப்பட்டது

இந்த நிலையில் ஒருபுறம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மூன்றாவது அணிக்கான முயற்சியை எடுத்து வந்தாலும் அதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் உள்பட பலர் இன்னும் வெளிப்படையான ஆதரவை தெரிவிக்கவில்லை. மேலும் பிரதமர் வேட்பாளராக மம்தா அல்லது மாயாவதியை ஏற்றுக்கொள்ளவும் சில தலைவர்கள் தயங்குவதாக தெரிகிறது.

இந்த நிலையில்தான் திடீரென மே 21ஆம் தேதி அனைத்து எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூட்டவுள்ளார். இந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜி, முக. ஸ்டாலின் உள்பட பல எதிர்க்கட்சி தலைவர்கள் கலந்து கொள்ள சம்மதித்துள்ளதாக தெரிகிறது.

எனவே தேர்தல் முடிவுக்கு பின்னரும் மூன்றாவது அணி அமைய வாய்ப்பில்லை என்றும், ஒன்று ராகுல் காந்தியை பிரதமராக எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அல்லது காங்கிரஸ் ஆதரவில் ஒரு தலைவர் பிரதமர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளப்பட்டு கூட்டணி ஆட்சி அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அப்பாவை மதிக்காதவர் விஜய்!.. காணாம போயிடுவார்... பிடி செல்வகுமார் பேட்டி...

புதிய கட்சி தொடங்கிய ஆதவ் அர்ஜூனாவின் மைத்துனர்.. இலட்சிய ஜனநாயகக் கட்சி என்று பெயர் வைப்பு..!

நான் எப்படி இறந்தேன்? வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட நாம் தமிழர் வேட்பாளர் கேள்வி..!

கூலி வேலை செய்த இரு இளைஞர்கள்.. திடீரென அடித்த அதிர்ஷ்டம்.. இன்று லட்சாதிபதிகள்..!

மக்களவைக்குள் இ-சிகரெட் பயன்படுத்திய எம்பி.. கடும் எச்சரிக்கை விடுத்த சபாநாயகர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments